முறைகேட்டுக்காரனது வாசலுக்கே சென்று முறைவாசல் செய்வதும் பரிதாபமே, இவை யாவிற்கும் மேலாக சட்டம் நீதி உள்ளிட்ட சகலமாடங்களும்... கட்சியின் நிறுவனர் வகுத்திட்ட விதிகளுக்கு மாறான செயல்களை ஆமோதிப்பது அருவருப்பான அப்பட்டமான ஒரு ஜனநாயக படுகொலையாகும். ஆக, தொண்டர்களின் உரிமையை பறிக்கும் சர்வாதிகாரத்திற்கு அங்கீகாரம் தருகிற வகையில் நீதிமன்றங்களின் தொடர் தீர்ப்புகளும், விரும்பும் வேகத்தில் விரும்பும் விதத்தில் அபகரிப்பு சக்திகளுக்கு சாத்தியமாகும் வாய்ப்புகளும், நீதி தருமம் இவற்றின் மீதான கடைசி நம்பிக்கையையும் அடியோடு தகர்த்து வருகிறது.