தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அரசுக்கு எதிராக செயல்பட்டதாக விருத்தாச்சலம் தொகுதி அ.தி.மு.க. எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி ஆகியோர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடம் இவர்கள் 3 பேரும் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதிமுகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்வதாகவும் குறிப்பிட்டு இவர்கள் மீது நடவடிக்கை . இது தொடர்பாக வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு 3 எம்எல்ஏக்களுக்கும் தனித்தனியாக சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.