நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பவர்களை அவர்களின் இருப்பிடத்திற்கே செனறு தாக்குதல் நடத்துவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பவர்களை அவர்களின் இருப்பிடத்திற்கே செனறு தாக்குதல் நடத்துவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளனர். 5ம் கட்டமாக மே 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இதனை முன்னிட்டு பீகார் மாநிலம் முகாபர்பூரில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாட்டில் தீவிரவாதம் வளர்ந்தால் எந்த மதத்தினருக்கும் பாதுகாப்பு இருக்காது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருப்பிடத்திற்கே சென்று தாக்குவோம் . தீவிரவாதத்துக்கு எதிராக தீவிரமாக செயல்படுவோம் என்றார்