யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்குக் காங்கிரஸ்,திரிணமூல் காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-வை நிறுத்தியுள்ளனர் . இதற்கான வேட்புமனு தாக்கலை யஷ்வந்த் சின்ஹா இன்று அளித்துள்ளார் .
இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி , ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவு யாருக்கென்று அறிவிக்காமலிருந்த நிலையில் , ராஷ்டிர சமிதி கட்சி தனது ஆதரவு யஷ்வந்த் சின்ஹா என தெரிவித்துள்ளனர் .
இது குறித்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர் கே.டி.ராமா ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் ,
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் , குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்துள்ளார்.அதோடு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களுடன் இன்றய வேட்புமனு தாக்கல் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன் என்று கூறியுள்ளார் .
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Ops -க்கு திமுக செக்....
