தீபாவளி அன்று 1,500 கிலோ ஆவின் இனிப்புகளை வீட்டிற்கு அபேஸ் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர்!

தீபாவளி அன்று 1,500 கிலோ ஆவின் இனிப்புகளை வீட்டிற்கு அபேஸ் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர்!
தீபாவளி அன்று 1,500 கிலோ ஆவின்  இனிப்புகளை  வீட்டிற்கு அபேஸ் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தீபாவளி அன்று தனது வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகளை இலவசமாக எடுத்துச் சென்றதாகப் பால்வளத்துறை அமைச்சர் நாசர் குற்றம்சாட்டு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தீபாவளி அன்று தனது வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகளை இலவசமாக எடுத்துச் சென்றதாகப் பால்வளத்துறை அமைச்சர் நாசர் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் ஆவின் விற்பனை, பொருட்களின் தரம் குறித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர்  ஆய்வு செய்தார். ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்து, தொழிலாளர்களிடம் பணி பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு தீபாவளி அன்று 1.5 டன் அளவுக்கு தீபாவளி இனிப்புகளை இலவசமாகக் கொடுத்து zஅனுப்பியுள்ளார். நிர்வாகத்திலிருந்து 1.5 டன் அளவுக்கு இலவசமாக அனுப்பி வைத்துள்ளார். அதற்கு ஒரு தொகையும் இதுவரை வரவில்லை இதற்கான ஆதாரம்  எங்களிடம் உள்ளது. அதன்மேல் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிருந்து இனிப்பு போனதற்கு அனைத்து ரசீதுகளும் உள்ளன. பணம் எதுவும் வரவில்லை. வெளியே போனதற்கு மட்டும் ஆவணங்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் நடந்த முறைகேடான பணி நியமனம் குறித்தும் விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக 234 பேர்  முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 634 முதுநிலை மற்றும் இளநிலை  ஆலை பணியாளர்களை நியமிக்க  முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com