தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்: டிடிவி தினகரன் பேச்சு!

தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று(ஜன.27) தண்டனைக் காலம் முடிந்து சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தண்டனை காலம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, விடுதலை செய்யப்பட்ட பத்திரத்தை சிறைத்துறையினர் சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், ”சசிகலா இன்று அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டதை தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சசிகலாவின் வருகையை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சசிகலா விடுதலை நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறந்ததை, அரசியலாக பார்க்கவில்லை” என்று அவர் கூறினார்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை