இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா, தினகரன் தரப்பினர் ஒரு அணியாகவும், ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் மற்றொரு அணியாகவும் செயல்பட்டனர்.
இதில், அதிமுகவும், அக் கட்சியின் சின்னமான இரட்டை இலையும் எந்த அணிக்கு சொந்தம் என உரிமை கோரியதில், ஓபிஎஸ் அணிக்கு சொந்தம் என தேர்தல் ஆணையம், கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பாக சசிகலா தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிப்ரவரி 28ஆம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதி மன்றம், சசிகலா தரப்பு மனுவை தள்ளுபடி செய்ததுடன், இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணிக்குதான் என்று தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரிக்கிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், சின்னம் குறித்து விசாரணை நடப்பதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.