சந்திரபாபு நாயுடுவை பின்னுக்கு தள்ளிய பேரன்!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒவ்வொரு ஆண்டும் தனது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த நிதியாண்டு இறுதியில் இருந்த சொத்து மதிப்பு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. தெலுங்குதேசம் கட்சியின் பொதுச்செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் இந்த விவரங்களை வெளியிட்டார்.
அதன்படி, சந்திரபாபு நாடுயுவின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 87 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பேரன் நாரா தேவன்ஸ், ரூ.19 கோடியே 42 லட்சம் சொத்துக்களை வைத்துள்ளார். மகன் லோகேஷ் ரூ.19 கோடி ரூபாய் சொத்தும், அவரது மனைவி நாரா பிராமணி ரூ.11 கோடியே 51 லட்சம் சொத்தும் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை விட தனது 5 வயது பேரனுக்கு அதிக சொத்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு