தமிழகத்தில் அதிமுக தலைமையில் மானங்கெட்ட கூட்டணி உருவாகியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் மானங்கெட்ட
கூட்டணி உருவாகியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
கரூர் மாவட்ட திமுக சார்பில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி
ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.கவின் ஊராட்சி சபை கூட்டத்தில்
மக்களின் எழுச்சியை பார்த்து தமிழக முதல்வருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் திமுக
குடும்ப கட்சி என்று விமர்னம் செய்து வருகிறார்.
குழந்தைபோல் தவழ்ந்து சென்று முதல்வர்
பதவியை பெற்ற உங்களுக்கு கருணாநிதி பற்றியோ, மு.க.ஸ்டாலின் பற்றியோ விமர்சிக்க எந்த
அருகதையும், தகுதியும் கிடையாது.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் மானம் கெட்ட
கூட்டணி உருவாகியுள்ளது. நான் கட்சிக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். உங்களில் ஒருவனாக
இருந்து கடைசிவரை கட்சிக்காக உழைப்பேன் என்றார்.