உ.பி: ’தேர்தல் பணிக்கு செல்ல விருப்பமில்லை’: கொரோனா பாஸிட்டிவ் போலிச்சான்றிதழ் கொடுத்த ஆசிரியை

அதிகாரிகள் சான்றிதழை சரிபார்த்தபோது, வாக்குப்பதிவு பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரி மற்றொரு நபரின் கோரோனா பாசிட்டிவ் ஆவணத்தை அவர் திருத்தியது தெரியவந்தது.
உ.பி: ’தேர்தல் பணிக்கு செல்ல விருப்பமில்லை’: கொரோனா பாஸிட்டிவ் போலிச்சான்றிதழ் கொடுத்த ஆசிரியை

தேர்தல் பணியில் பங்கேற்க விருப்பம் இல்லாததால் அதைத் தவிர்க்க ஆசிரியை ஒருவர் கொரோனா போலிச்சன்றிதழ் கொடுத்தது கண்டறியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், பில்பிட்டில் உள்ள புரான்பூர் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியை ஒருவர், இன்று நடைபெற இருக்கும் நகராட்சித் தேர்தலில் வாக்குச் சாவடியில் பணியாற்றுவதில் இருந்து விலக்குப் பெறுவதற்காக போலி கொரோனா மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புரான்பூர் தொகுதியின் பச்பேடா கிராம தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ரிது தோமர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மே- 11ம் தேதி (இன்று) நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் பிங்க் சாவடியில் வாக்குச் சாவடி எண்- 3ல் உள்ள வாக்குச் சாவடியின் தேர்தல் நடத்தும் பணி தோமருக்கு ஒதுக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

"தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஆசிரியை கொரோனா பாசிட்டிவ் என சான்றளிக்கும் ஆவணத்துடன் விண்ணப்பம் கொடுத்துள்ளார். அதிகாரிகள் சான்றிதழை சரிபார்த்தபோது, வாக்குப்பதிவு பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரி மற்றொரு நபரின் கோரோனா பாசிட்டிவ் ஆவணத்தை அவர் திருத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக ஆசிரியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு அதிகாரி அமித் குமார் சிங்கிற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com