என்.சி.பி தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகல் - காரணம் என்ன?

என்.சி.பி தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகல் - காரணம் என்ன?

மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

"நான் உங்களுடன் இருக்கிறேன், ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராக இல்லை" என்று சரத் பவார் உணர்ச்சிவசப்பட்டு கட்சித் தொண்டர்களிடம் கூறினார். இனி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும், கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும் அறிவித்துள்ளார். இவரது திடீர் அறிவிப்பை சற்றும் எதிர்பாராத என்சிபி கட்சியினர் முடிவை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பேசிய அஜித் பவார், மே -1 ஆம் தேதி சரத் பவார் தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்றும் ஆனால், மும்பையில் நடைபெற்ற எம்.வி.ஏ பேரணி காரணமாக அதைத் தள்ளிப் போட்டதாகவும் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர், சரத் பவாரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.

"பவாரின் அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது முடிவை நாம் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் காலத்திற்கும் ஏற்ப முடிவு எடுக்க வேண்டும். பவார் ஒரு முடிவை எடுத்துள்ளார். அவர் அதை திரும்பப் பெறமாட்டார்" என்று அஜித் பவார் கூறினார்.

முன்னாள் துணை முதலமைச்சரான அவரது மருமகன் அஜித் பவார் பாஜகவுக்கு சூடுபிடித்துள்ள நிலையில் திரு பவாரின் பெரிய நடவடிக்கை வந்துள்ளது.சரத் ​​பவார் காங்கிரஸில் இருந்து விலகி 1999ல் என்சிபியை உருவாக்கினார். சமீபத்தில், அவர் சூசகமாக, சப்பாத்தி செய்யும் போது, சப்பாத்தியை சரியான நேரத்தில் திருப்பவில்லை என்றால் கருகி விடும் என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com