ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி!

ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி!
ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி!

ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி!

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முன்பதிவு செய்தது.

நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் ப.சிதம்பரம், 2007ஆம் ஆண்டில் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை விதிகளை மீறி  ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு பெற்றுத் தந்ததாக குற்றஞ்சாட்டிய சி.பி.ஐ, 2017ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இது தொடர்பாக 2017ஆம் ஆண்டில் அமலாக்கத்துறையும் பண மோசடி வழக்கை பதிவு செய்தது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் அவரது ஜோர் பாக் இல்லத்தில் இருந்து கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, அக்டோபர் 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ப.சிதம்பரம் சார்பில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவிட்டார். 

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com