வரலாறு காணாத மழை: இமாச்சலப்பிரதேசத்தில் 765 சாலைகள் மூடல்- 6 பேர் மீட்பு

கடுமையான மழைக்கு மத்தியில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இமாச்சலப்பிரதேசம்
இமாச்சலப்பிரதேசம்

இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலம் முழுவதும் பரவலான சேதம் ஏற்பட்டது.

இமாச்சல பிரதேசத்தின் சுமார் 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மண்டியின் துனாக் பஜாரில் மலைகளில் இருந்து சாலையில் மழைநீர் ஓடுவதைக் காட்டும் புதிய வீடியோ இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

மண்டி மாவட்டத்தின், ஓநார் கிராமத்தில் உள்ள துனாக் பஜாரில் சேற்று நீரில் அடித்துக் கொண்டு செல்லப்பட்ட பெரிய மரக் கட்டைகள் பல வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தின. துனாக் பஜாரில் நடந்த பயங்கர காட்சியை படம்பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கடுமையான மழைக்கு மத்தியில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராமத்தில் பெரிய தண்டுகள் மோதியதால் பல மரங்களும் வேரோடு சாய்ந்தன. சாலை மூடப்பட்டு, குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் முகாமிட்டு பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். "தயவுசெய்து இந்த பேரிடரின் போது மக்களுக்கு உதவுங்கள் மற்றும் அவர்களின் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிசெய்க" என்று அவர் கூறினார். தொடர் மழை காரணமாக பியாஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 6 பேர் மீட்கப்பட்டனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com