"யாராவது மது அருந்தினால், அவர்கள் இறந்துவிடுவார்கள் என்கிற உதாரணம் நம் முன்னே உள்ளது. இதற்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும். அந்த இடங்களைப் பார்வையிட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இங்கே மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் கூட, கள்ள சாராயத்தால் மக்கள் இறந்தனர். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இங்கு மதுவிலக்கு இருப்பதால், ஏதாவது கள்ள விற்பனை நடக்கும். அதனால் மக்கள் இறக்கின்றனர். மது மோசமானது. உட்கொள்ளக்கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.