புதுச்சேரி: சட்டப்பேரவை வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ‘எப்போது அமல்?’ என சபாநாயகர் அறிவிப்பு

புதுச்சேரி: சட்டப்பேரவை வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ‘எப்போது அமல்?’ என சபாநாயகர் அறிவிப்பு
புதுச்சேரி: சட்டப்பேரவை வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ‘எப்போது அமல்?’ என சபாநாயகர் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் 01.5.2023 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திற்குள் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மே 1 முதல் தடை விதித்து பேரவையில் சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், புதுச்சேரி அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. 

பிளாஸ்டிக் தூக்குப்பைகள், குவளைகள், தட்டுகள், குடிநீர் பாக்கெட்டுகள், விரிப்பான்கள், தெர்மாகோல் குவளைகள், தெர்மாகோல் தட்டுகள், உணவுப் பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய் மற்றும் ஐஸ் கிரீம், தெர்மாகோல் அலங்கார பொருட்கள், பிளாஸ்டிக் முள்கரண்டி, சிறிய பேக்கேஜிங் போர்த்திய தாள்கள், இனிப்புப் பெட்டிகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளைச் சுற்றி பிளாஸ்டிக் தாள்களைப் பேக்கிங் செய்தல் மற்றும் ஃப்ளெக்ஸ் பேனர் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன.

ஆகையால் புதுச்சேரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு, சட்டப்பேரவை அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மேற்கூறிய 14 பொருட்களை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் 01.5.2023 முதல் பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளார். மேலும் இதற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com