மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல்

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள்கள் அமலாக்கப்பிரிவு காவல் முடிவடைந்த நிலையில் மேலும் 5 நாள்கள் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ பிரிவு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் மத்திய புலனாய்வு பிரிவு அமைப்பு அவரை நீதிமன்றத்தின் அனுமதி மூலம் விசாரணை நடத்தியது. இதனையடுத்து, மணீஷ் சிசோடியாவை காவலில் எடுத்து 7 நாள்கள் விசாரணை நடத்தியது. 

பின்னர், மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 14 நாள்கள் அவரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

திகார் சிறையில் வைத்து மனீஷ் சிசோடியாவிடம் விசாரணை செய்யப்பட்டது. அப்போது அவர் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில்"டெல்லியில் கல்வி அமைச்சராக பணியாற்றிய போது ஆட்சித்தலைவர்கள் மாணவர்களுக்குச் சிறந்த கல்வி மற்றும் கல்லூரிகளை ஏற்பாடு செய்யாதது ஏன்? என்ற கேள்வி எனக்குப் பலமுறை இருந்துள்ளது. ஆனால், இப்போது அந்த கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது. மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதைக் காட்டிலும் , அரசியல் கட்சியின் தலைவர்களைச் சிறையில் அடைப்பது எளிதான காரியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த கடிதத்தில்,"பாஜக ஆளும் மாநிலங்களில் கூட அரசுப் பள்ளிகளில் மோசமாக நிர்வாகம் செய்யப்படுவதால், கல்வியைத் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்துகின்றனர். எதிர்க்கட்சியின் தலைவர்களை எளிதாகச் சிறையில் அடைக்கலாம். ஆனால், எதிர்காலமானது கல்வி சார்ந்த அரசியலாகும். அதனை உணருங்கள்"என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், சிபிஐ வழக்கில் திகார் சிறையிலிருந்த மணீஷ் சிசோடியாவை, விசாரணைக்குப் பின் அமலாக்கப்பிரிவு கைது செய்தது. இதனையடுத்து மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள்கள் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் விசாரிக்க அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

அமலாக்கப்பிரிவு மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 5 நாள் காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com