கேரளாவில் கார் மீது மோதிய பேருந்து ; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

கேரளாவில் கார் மீது மோதிய பேருந்து ; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்
கேரளாவில் கார் மீது மோதிய பேருந்து ;  அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பத்தனம்திட்டாவில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து கார் மீது மோதி தேவாலயத்திற்குள் நுழைந்து விபத்து, 15 பேர் காயமடைந்தனர். அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் எதிர் திசையில் வந்த கார் மீது மோதியது. கார் மீது மோதிய பிறகு பஸ் அருகில் உள்ள தேவாலயத்தின் சுற்றுச்சுவரிலும் மோதியது.
இதனால் சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15பேர் காயமடைந்தனர். பஸ் டிரைவர் மற்றும் ஒரு பெண் பயணி பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் நான்கு பேர் கோனி தாலுகா மருத்துவமனையிலும், மீதமுள்ளவர்கள் பத்தனம்திட்டா அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com