மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் பெண்ணுக்கு, ஷேக் என்பவருடன் திருமணம் ஆகி, 4 வயதில் மகன் உள்ளார்.
மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் பெண்ணுக்கு, ஷேக் என்பவருடன் திருமணம் ஆகி, 4 வயதில் மகன் உள்ளார்.
இதற்கிடையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால், உறவினர் வீட்டில் அந்தப் பெண் தங்கியிருந்தார்.
இந் நிலையில், அவருக்கு கடந்த 12ஆம் தேதி வாட்ஸ் அப் மூலம் தலாக், தலாக், தலாக் எனக் கூறி, அவரது கணவர் மெசேஜ் அனுப்பி விவகாரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஷேக் மீது முஸ்லீம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல், டெல்லியைச் சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவர், தனது கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதோடு, முத்தலாக் கூறி விவகாரத்து செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.