5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… ஆசிரியர் கைது..!

5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… ஆசிரியர் கைது..!
5 வயது சிறுமிக்கு நடந்த  கொடூரம்… ஆசிரியர் கைது..!

வார்த்தையை சரியாக உச்சரிக்காத 5 வயது சிறுமியின் கையை டியூசன் ஆசிரியர் பிரயாக் கடுமையாக முறுக்கி சித்ரவதை செய்ததாக அவர் மீது வழக்கு பாய்ந்தள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரயாக் விஸ்வகர்மா என்ற நபர் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். 

கடந்த 27ம் தேதி 'கிளி" என்ற வார்த்தையை சரியாக உச்சரிக்காத 5 வயது சிறுமியின் கையை பிரயாக் கடுமையாக  முறுக்கி சித்ரவதை செய்ததாக தெரிகிறது. 

இதனால் சிறுமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஹபீப்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் விசாரித்து  பிரயாக் விஸ்வகர்மா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com