முதலிரவு அறைக்குள் சென்ற மணமகன் திடீர் சாவு
ஆந்திராவின் அன்னமைய்யா மாவட்டம் பட்டிப்பாடி வாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்த துளசி பிரசாத். இவர் அருகில் உள்ள மதன பள்ளியை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்தார்.
முதலில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பின்னர் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு பெற்றோரிடம் சம்மதத்தை பெற்று கடந்த 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அன்றைய தினம் முதலிரவுக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்திருந்த நிலையில், முதலிரவு அறைக்குள் கனவுகளுடன் நுழைந்த மணமகன் சற்று நேரத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்ததும் மணப்பெண் அலறியதையடுத்து குடும்பத்தார் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.