தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள்!

தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள்!
தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள்!

தமிழில் நீட் நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழில் நீட் நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஹால்  டிக்கெட்டு கடந்த 15ஆம் தேதி தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஆனால்  பல மாணவர்களின் நுழைவுச் சீட்டுகளில் பிழைகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட பிழைகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், பிழைகள் இருந்தால் மாணவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் ஹால் டிக்கெட்டை சரிசெய்துகொள்ளலாம் எனவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும், தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆங்கில வழியில் தேர்வு எழுதும் சிலருக்கு மட்டும் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com