துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து!

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து!

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை...

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றில் அதிகாரிகளிடமுள்ள ஆவணங்களை கேட்கவும், துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக கடந்த 2017 ஜனவரி 21ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. 
ஆனால் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு செல்லாது என அறிவிக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  
இந்நிலையில். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, முதலமைச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல்களிலும் தடையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உத்தரவிட்டுள்ளது. 
மேலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரத்தையும் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com