குற்றவாளிகள் ஒருபோதும் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை என நட்டா தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் ஒருபோதும் குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை என நட்டா தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்ட் தொடர்பான வழக்கில் சோனியாவும் ராகுலும் விசாரணைக்கு நேரில் 8ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இதற்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் 2015ம் ஆண்டு மூடப்பட்ட வழக்கை மறுபடியும் உள்நோக்கத்துடன் மத்திய அரசு விசாரணைக்கு எடுப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் முகத்தில் இருக்கும் கறையைத் துடைக்காமல் கண்ணாடியில் உள்ள கறையைத் துடைக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "குற்றவாளிகள் எப்போது குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.