பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சுனில்ஜாகர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!
பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்
தலைவர் சுனில்ஜாகர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!
பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்
முன்னாள் தலைவரான சுனில்ஜாகர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருந்து
கொண்டு, பஞ்சாப்பில் கட்சியை அழித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியை
நல்ல மனிதர் என பாராட்டிய சுனில் ஜாக்கர், துதிபாடிகளிடம் இருந்து அவர் ஒதுங்கி இருக்க
வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக
அறிவித்த சுனில் ஜாக்கர், கட்சிக்கு குட்பை என கூறி முடித்துக் கொண்டார். 2017ம் ஆண்டு
முதல், 2021ம் ஆண்டு வரை அவர் பஞ்சாப் மாநில தலைவராக இருந்தார். நவ்ஜோத் சிங் சித்துவை
காங்கிரசின் மாநில தலைவராக நியமிப்பதற்காக, அவர் அந்த பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார்.
சுனில் ஜாக்கரின் விலகல காங்கிரஸ் கட்சியினரிடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
