இனி ஓய்வெடுக்கலாம் என தாம் நினைக்கவில்லை – பிரதமர் மோடி!
இனி
ஓய்வெடுக்கலாம் என தாம் நினைக்கவில்லை – பிரதமர் மோடி!
அடுத்த
பாராளுமன்ற தேர்தலிலும் தானே பாஜக., வின் பிரதமர் வேட்பாளர் என பிரதமர் மோடி சூசகமாக
தெரிவித்துள்ளார்.
குஜராத்தின்
பருச் பகுதி மக்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தம்மை
சந்தித்த எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் இரண்டு முறை பிரதமராக இருந்தாலே போதும்
என்றும் வேறு என்ன வேண்டும் என குறிப்பிட்டதாக கூறினார்.
ஆனால்,
மோடி முற்றிலும் மாறுபட்ட படைப்பு என்பது அவருக்கு தெரியவில்லை என பிரதமர் மோடி கூறினார்.
குஜராத தம்மை வடிவமைத்திருப்பதாக கூறிய அவர் அதனால் தான் நடந்தது நடந்து விட்டது என்றார்.
இனி
ஓய்வெடுக்கலாம் என தாம் நினைக்கவில்லை என்றும் நலத்திட்டங்கள் 100 விழுக்காடு மக்களை
சென்றடைந்ததை உறுதி செய்வதே தமது கனவு எனவும் பிரதமர் மோடி கூறினார்.
முன்பை
விட, மேலும் உத்வேகத்துடன் பணியாற்றப்போவதாக அந்த எதிர்க்கட்சி தலைவரிடம் தான் கூறியதாகவும்
பிரதமர் மோடி தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
