தேசியம்
பழைய இரும்பை விற்று ரூ. 4,575 கோடி சம்பாதித்த இந்தியன் ரயில்வே..!
பழைய இரும்பை விற்று ரூ. 4,575 கோடி சம்பாதித்த இந்தியன் ரயில்வே..!
பழைய இரும்பை விற்று ரூ. 4,575 கோடி சம்பாதித்த இந்தியன் ரயில்வே..!
பழைய இரும்பு விற்பனை மூலம் ஓராண்டில் ரூ.4,575 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே நிர்வாகத்திடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம் பழைய இரும்பு விற்பனை மூலம் ஓராண்டில் ரூ.4,575 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
.பழைய தண்டவாளங்களை அகற்றியபோது கிடைத்த பழைய இரும்புகளை விற்பதற்கான ஏலம் வெளிப்படையாகவும், மின்னணு முறையில் நடத்தப்பட்டதாகவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.