வருமான வரித்துறை சோதனை நடத்தினால் தகவல் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…

வருமான வரித்துறை சோதனை நடத்தினால் தகவல் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால், தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால், தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வருவாய்த் துறையின் நிர்வாகப் பிரிவில் இயங்கும், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம் ஆகியவை நிதி தொடர்பான குற்ற நடவடிக்கைகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. 
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து, மத்தியப்பிரதேசத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். 
ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறையினரை ஏவி விடுவதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய வருவாய்ச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகள் பாரபட்சமின்றி நடுநிலையாகச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரித்துறை மூலம் நடத்தப்படும் சோதனையை, தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com