கொரோனாவால் பயந்தேன், உடல் எடை அதிகரித்தேன்; மனம் திறந்து பேசிய நடிகை மலைக்கா அரோரா!

கொரோனாவால் பயந்தேன், உடல் எடை அதிகரித்தேன்; மனம் திறந்து பேசிய நடிகை மலைக்கா அரோரா!
கொரோனாவால் பயந்தேன், உடல் எடை அதிகரித்தேன்; மனம் திறந்து பேசிய நடிகை மலைக்கா அரோரா!

நடிகை மலைக்கா அரோரா கொரோனா தொற்று குறித்து பேசியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா. இவருக்கு வயது 47. தற்போது இன்ஸ்டாகிராமில் கொரோனா தொற்று குறித்து மலைக்கா அரோரா பேசியுள்ளார். 
அதன் படி, "கடந்த ஆண்டு செப்டம்பரில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் உடல் ரீதியாக சில சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. நடைபயிற்சி போன்ற அடிப்படை இயக்கங்கள் ஒரு கடினமான பணியாக உணர்ந்தேன். 
மேலும் தன் உடலின் புகைப்படத்தை பதிவிட்ட அவர், "நான் எடை அதிகரித்தேன், பலவீனமாக உணர்ந்தேன், எனது சகிப்புத்தன்மையை இழந்தேன், நான் எனது குடும்பத்திலிருந்து விலகி இருந்தேன், மேலும் பலவற்றைச் செய்தேன். இறுதியாக செப்டம்பர் 26 ஆம் தேதி குணமடைந்தேன். 
யாரும் இந்த கொரோனாவை அவ்வளவு எளிதாக எண்ணி விட வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com