ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், நோய் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகின்றது.
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த மனுவில் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஒரு பகுதியில் கொரோனா நோயாளிகளுக்காக, ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வழங்கவேண்டும் என்று மத்திய அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் ஆலை நிர்வாகம் கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.