தேசியம்
மக்களுக்கு உதவ தன் இருசக்கர வாகனத்தை ஆம்புலன்ஸ் போல் மாற்றிய 23 வயது இளைஞர்..!
மக்களுக்கு உதவ தன் இருசக்கர வாகனத்தை ஆம்புலன்ஸ் போல் மாற்றிய 23 வயது இளைஞர்..!
இருசக்கர வாகனத்தை ஆம்புலன்ஸ் போல மாற்றி பொதுமக்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் வாரணாசியை சேர்ந்த 23 வயது இளைஞர் கபீர்.
வாரணாசியை சேர்ந்த இளைஞர் கபீர். இவருக்கு வயது 23. இந்த 23 வயது இளைஞரின் தன்னலமற்ற சேவைதான் இப்போது சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இவர் தனது இருசக்கர வாகனத்தை ஆம்புலன்ஸ் போல மாற்றியுள்ளார். இதன் மூலம் பொதுமக்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இச்செயல் அங்குள்ள பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருப்பதாக கூறுகின்றனர்.
ஆதரவற்றோர் மற்றும் ஏழை மக்களுக்கு இறுதிச் சடங்கு செய்து வருகிறார். மேலும், கொரோனா ஊரடங்கு காலத்திலும் இவர் தனது சேவையை நிறுத்தவில்லை என அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.