வெளி மாநிலங்களில் இருந்து அசாம் வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயமாக வீட்டுத்தனிமையில் இருப்பது அவசியம் என அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கம் மிக கொடூரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக 2.50- லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒருநாளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
இந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து அசாம் வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் தனிமைப்படுத்துதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 1,665- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.