வடகிழக்கு இந்தியா முன்னேற பிற பகுதிகளுடனான இணைப்பு அவசியம்: பிரதமர் மோடி

வடகிழக்கு இந்தியா முன்னேற பிற பகுதிகளுடனான இணைப்பு அவசியம்: பிரதமர் மோடி

வடகிழக்கு இந்தியா முன்னேற மற்றும் செழிப்படைய பிற பகுதிகளுடனான இணைப்பு மிக அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இந்தியா முன்னேற மற்றும் செழிப்படைய பிற பகுதிகளுடனான இணைப்பு மிக அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூரில் மூன்றாயிரத்து 54 கோடி ரூபாய் செலவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் மணிப்பூர் மாநில ஆளுநர், முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங், வடகிழக்கு மாநில மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி; வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றமடைய மற்றும் செழிப்படைய   பிற பகுதிகளுடனான இணைப்பு மிக அவசையம் என தெரிவித்துள்ளார். மேலும்  பாதுகாப்பான மற்றும் தன்னிறைவான இந்தியா உருவாகவும் இது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com