சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில், கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து தனது மகளை மீட்க முயற்சிப்பதைக் காணலாம். அந்த பெண், குழந்தையை கடத்த முயன்ற மோட்டார் சைக்கிளை தள்ளுகிறார். அந்த இரு சக்கர வாகனம் தரையில் கீழே விழுகிறது. அதைத் தொடர்ந்து அந்த கடத்தல்காரர்கள் இருவர் ஓடத் தொடங்குகின்றனர். அப்போது, பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்குப் பின் ஓடி அவரை பிடிக்க முயன்றுள்ளார். மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர், தனது ஸ்கூட்டரை சாலையின் நடுவில் நிறுத்தி அவர்களின் வழியைத் தடுக்கிறார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.