உத்திரபிரதேசம், பீகாரில் இடி மின்னலுக்கு 31 பேர் பலி..

உத்திரபிரதேசம், பீகாரில் இடி மின்னலுக்கு 31 பேர் பலி..

உத்திரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் புதிதாக இடி மின்னலுக்கு 31 பேர் நேற்று உயிரிழந்திருப்பது அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் புதிதாக இடி மின்னலுக்கு 31 பேர் நேற்று உயிரிழந்திருப்பது அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
உத்திரபிரதேசம்  பீகார் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை, வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், புதியதாக 31 பேர் இடிமின்னல் தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அசாமில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலியானார். ஏராளமான விளைநிலங்கள் மழையால் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. சுமார் 73 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
அண்டை மாநிலங்களில் மழை கொட்டிய போதும், தலைநகர் டெல்லியில் இயல்பான பருவநிலையே காணப்படுகிறது

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com