சீனாவுடன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள், ஆயுதங்களை ரூ.38,900 கோடிக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது லடாக் பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு செய்து வருவது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் முப்படைத்தளபதி பிபின் ராவத்தும் லடாக் சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.