வீட்டில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரியுங்கள்

வீட்டில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரியுங்கள்: பிரதமர் மோடி
வீட்டில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரியுங்கள்

வீட்டில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரியுங்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2015ஆம் ஆண்டு ஐ.நா., ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி 6வது சர்வதேச யோகா தினம் வரும் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவரும் வீடுகளில் இருந்தபடி யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் "தொற்று-நோயால் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம், ஆனால் நமது உற்சாகம் அல்ல. இந்த ஆண்டு யோகா தினத்தை வீடுகளிலிருந்து அனுசரிப்போம். குடும்பத்தினருடன் சேர்ந்து யோகா செய்வோம்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com