ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்தக் கூட்டம் வரும் 19ஆம் தேதி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்தக் கூட்டம் வரும் 19ஆம் தேதி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 34வது கூட்டத்தை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறுவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதை அடுத்து இந்த கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அனைத்து மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட உள்ளது.
ரியல் எஸ்டேட் துறை மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.