அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்களவை தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.