முதல் முறை மேக்கப் போடுவோர் கவனத்திற்கு!!

முதல் முறை மேக்கப் போடுவோர் கவனத்திற்கு!!

முதல் முறை மேக்கப் போடுவோர் கவனத்திற்கு!!

முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரை தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது. அடுத்தது மாய்ச்சுரைசிங் க்ரீம் இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். இந்த ஈரப்பதம் தான் நம் இளமையை தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளமையுடன் தெரிவது இதனால்தான்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித்தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ கிரீம்களையோ அல்லது ட்ரை பவுடரையும் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது. மேலும் மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.
ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். அதற்குமேல் வைத்திருந்தால் மேக்கப் பொருட்களிலுள்ள கெமிக்கல்ஸ் சருமத்திலுள்ளே இறங்கிவிடும். ஆதலால் நாள் முழுவதும் மேக்கப்புடன் இருக்க வேண்டுமென்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை ஏற்கனவே போட்ட மேக்கப்பை கலைத்து விட்டு அரைமணி நேரம் கழித்து மறுபடியும் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மேக்கப் பினால் சருமம் பாதிக்காது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com