பிரசவ தழும்பு மறையனுமா இதை செய்யுங்க...

பிரசவ தழும்பு மறையனுமா இதை செய்யுங்க...

பிரசவ தழும்பு மறையனுமா இதை செய்யுங்க...

பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தழும்புகளை மறைய செய்ய கோகோ பட்டர் உதவி செய்கிறது. கர்ப்பமாக இருக்கும் போதில் இருந்தே இந்த கோகோ பட்டரை உங்கள் வயிற்றில் தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் குளிக்கலாம். அதிகமாக பயன்படுத்தக் கூடாது. சருமத்துளைகள் வழியே குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கலாம். பிரசவத்திற்கு பின்னர் தழும்புகள் மீது கோகோ பட்டர் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குளிக்கவும்.
கடைகளில் விற்கப்படும் உலர்ந்த ஆப்ரிகாட் அல்லது புதிய பிரெஷ் ஆப்ரிகாட்களை வாங்கி அதன் சதைப் பகுதியை நன்கு மசித்து கொள்ளுங்கள். இதனை தழும்புகளின் மீது தடவ வேண்டும். அதற்கு முன் ஆப்ரிகாட் விதையை நீக்கி விடுதல் முக்கியம், ஆப்ரிகாட் எண்ணெய் அல்லது எசென்ஸ் கிடைத்தால் அதனையும் பயன்படுத்தலாம். 15 நிமிடம் சருமத்தில் ஊற விட்டு பின்னர் கழுவி விடவும்.
கற்றாழை சர்வ ரோக நிவாரணி. அதனால் கற்றாழை ஜெல்லை எடுத்து சிசேரியன் தழும்பு மற்றும் பிரசவ தழும்புகள் மீது தடவி விடவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து கழுவி மீண்டும் பேபி லோஷன் எடுத்து தழும்புகள் மீது தடவி வரவும். இதனால் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். மூன்று மாதங்களில் முற்றிலுமாக மறைந்து விடும்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com