பிறந்த குழந்தையின் குளியல்!!

பிறந்த குழந்தையின் குளியல்!!

பிறந்த குழந்தையின் குளியல்!!

குழந்தையின் கழுத்து சற்று மேல் நோக்கி இருக்கவேண்டும். இல்லையெனில் உடலில் நீர் ஊற்றும்போது குழந்தையின் வாய்க்குள் நீர் சென்றுவிட வாய்ப்புண்டு. எனவே மனையில் உட்காரும்போதே அதற்கு ஏற்ப உட்காருவது அவசியம். பிறகு குழந்தையின் உடல் கை, கால்கள், தொண்டை இடுக்குப் பகுதிகளில் சோப்பு கொண்டு தேய்த்து மெதுவாக நீரை ஊற்றுங்கள். பிறகு குழந்தையை குப்புற படுக்க வைத்து, பின்பக்க கழுத்து, முதுகுப்பகுதி, கால் பின்புறம் சோப்பு போட்டு இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்க்கும்படி சேர்த்தும், கால்களை சேர்த்து நீர் ஊற்றுங்கள்.
மீண்டும் குழந்தையை முன் பக்கமாக திருப்பி உள்ளங்கைகளை நீரில் நனைத்து குழந்தையின் முகத்தை ஈரமாக்கி நெற்றி, கன்னம் பகுதியில் சோப்பு போட்டு, அதேபோன்று சிறிதளவு தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவி (துடைத்து)எடுங்கள். குழந்தையின் கண்களில் சோப்பு தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வது அவசியம் குளிக்க வைக்கும் போதும் இதே போன்று முகத்தில் படாமல் நீர் ஊற்றி தலையை சுத்தம் செய்ய வேண்டும். 
பிறகு குழந்தையை தண்ணீர் இல்லாமல் துவட்டி விடுங்கள். குழந்தைக்கு மூன்று மாதங்கள் வரை இப்படித்தான் குளிக்க வைக்க வேண்டும். பிறகு குழந்தையை காலில் உட்கார வைத்தும் குளிக்க வைக்கலாம். பிறந்த குழந்தையை 11 நாட்களுக்குப் பிறகே குளிக்க வைப்பது நம் முன்னோர் காலத்து வழக்கம். ஆனால் தற்போது மருத்துவர்கள், தினமும் குழந்தையை குளிக்க வைக்க அறிவுறுத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com