திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் பிரபல தனியார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பேருந்துகள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
இதனால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, தீயணைப்புத்துறையினருககு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கடும் போராட்டத்திற்கு பின்னர், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தில், தனியார் பேருந்து அலுவலகத்தில் இருந்த கம்யூட்டர் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.