திருவனந்தபுரம்: ஆண் வேடத்தில் மாமியாரின் காலை உடைத்த மருமகள் - நடந்தது என்ன?

வாசந்தி
வாசந்தி

திருவனந்தபுரத்தில் ஆண் வேடம் தரித்து மாமியாரின் காலை கம்பியால் அடித்து உடைத்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வாசந்தி. இவரது இரண்டாவது மகன் ரெதீஷ் குமார். இவரது மனைவி சுகன்யா.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் அருகில் உள்ள பால் நிலையத்திற்கு வாசந்தி சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆண் வேடம் தரித்து வந்தவர் ஒருவர் அவரை வழிமறித்து, இரும்பு கம்பியால் காலிலும், தலையிலும் தாறுமாறாக தாக்கியுள்ளார். இதில் வாசந்தியின் கால் ஒடிந்துள்ளது.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் தாக்கியவர் அங்கிருந்து தப்பிவிட்டார். காயப்பட்டுகிடந்த இவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து, திருவனந்தபுரம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், பெண் ஒருவர் ஆண் போல் வேடம் அணிந்து வந்திருப்பதை தெரிந்து கொண்ட போலீசார், வீட்டில் உள்ளவர்கள் இடத்தில் விசாரணை மேற்கொண்டதில் கணவனின் சட்டை மற்றும் பேண்டை போட்டு முகமூடி அணிந்து வந்து மாமியாரான வசந்தியை தாக்கியது அவரது மருமகளான சுகன்யா என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சுகன்யாவின் கணவர் ரெதீஷ்குமார் போதைக்கு அடிமையானவர் என்பதும், போதையில் வீட்டிற்கு வரும் கணவர் தினசரி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அதற்கு முக்கிய காரணம் தனது மாமியார் தான் என கருதி, தனது மாமியாரை சுகன்யா திட்டமிட்டு தாக்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால், சுகன்யாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com