சேலம்: தனியார் தீம்பார்க்கில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு - காரணம் என்ன?

பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தீம் பார்க் சென்ற குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்
சௌடேஸ்வரன்
சௌடேஸ்வரன்

சேலம் எருமாபாளையம் பகுதியில் ரஞ்சித் - உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சௌடேஸ்வரன், துவேஸ்வரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் கிச்சிப்பாளையம் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளி விடுமுறையை கழிக்க குடும்பத்துடன், சேலம் மல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் தீம் பார்க் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த இவர்களது மூத்தமகன் சௌடேஸ்வரன் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

உடனடியாக சௌடேஸ்வரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், சௌடேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக தீம் பார்க் சென்ற குடும்பத்தினருக்கு சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com