மும்பை: இன்ஸ்டாகிராம் பதிவால் வன்முறை - ஒருவர் பலி - 18 பேர் படுகாயம் - என்ன நடந்தது?

வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்
தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வாகனம்
தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வாகனம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகொலா மாவட்டம் ஓல்ட் சிட்டி பகுதியில், இன்ஸ்டாகிராம் பதிவு காரணமாக ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 18 பேர் படுகாயமடைந்தனர்.

மராட்டிய மாநிலம் அகொலா மாவட்டத்தில் ஓல்ட் சிட்டி பகுதி உள்ளது. இங்கு, இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக இந்து - இஸ்லாம் மதத்தினர் இடையே திடீர் மோதல் நிகழ்ந்துள்ளது. இதனால், நேற்று இரவு இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்கலை வீசி தாக்கிக் கொண்டனர். குறிப்பாக, வாகனங்கள் அடித்து நொறுக்கி தீவைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில், ஒருவர் உயிரிழந்தார். 18 பேர் படுகாயமடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது. இதனால், பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து அமைதியை நிலைநாட்ட முயன்றனர். ஆனால், அங்கிருந்தவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததால் அவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் விரட்டியடித்தனர்.

மேலும், இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறை நடந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அந்த பகுதியில் அமைதியைக் கொண்டு வரும் வகையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com