சென்னை: சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை - என்ன காரணம்?

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.5 லட்சத்திற்கு மேல் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது
கவுதமன்
கவுதமன்

சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் கவுதமன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் கவுதமன் (24).

இவர் சென்னையில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் (கிரிப்டோ கரன்சி) ஈடுபடத் தொடங்கினார்.

இதில் ரூ.5 லட்சத்திற்கு மேல் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே, கவுதமன் தனது வீட்டில் உள்ள அறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வாயில் நுரை தள்ளிய நிலையில் கவுதமன் பிணமாக கிடந்துள்ளார். இதனைக்கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவுதமன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சட்டக்கல்லூரி மாணவர் கவுதமன் தற்கொலை குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பு:

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மைய எண்: 104

சினேகா தொண்டு நிறுவனம்:

எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.

தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com