சென்னை: மதமாற்றம் சர்ச்சை - "தி கேரளா ஸ்டோரி" படத்துக்குத் தடை? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

the kerala story
the kerala story

மதமாற்றத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் உள்ள பெண்கள் காணாமல் போனதன் பின்னணியை மையமாக வைத்து "தி கேரளா ஸ்டோரி" என்ற திரைப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மே 5-ம் மேதி திரைக்கு வர உள்ளது.

கதையின் மையக் கருவாக, காணாமல் போகும் 32 ஆயிரம் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும், பின்னர் தடை செய்யப்பட்ட ஐ.எஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ அமைப்பில் சேர்ந்து தீவிரவாதத்தைப் பெண்கள் பரப்புவதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் "டீசர்" கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது.

அப்போது, மதசார்பற்ற இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் வரும் மே 5 ம் தேதி 5 மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

இந்த நிலையில், தமிழகத்தில் "தி கேரளா ஸ்டோரி" திடைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதபோல, கேரளாவிலும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com