துரை ஸ்லீப்பிங், ஜோரத்தால, கள்ள மவுனி உள்ளிட்ட ஆல்பம் பாடல்களை இயக்கியவர் கென் ராய்சன்.
அட்டி கல்ஷர் என்ற பெயரில் இண்டிபெண்டன்ட் மியூசிக் லேபில்-ஐ துவக்கி வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதை தொடங்கி வைத்தது கென் ராய்சன் தான். ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சந்தோஷ் நாராயணன், "இந்திய இசையின் எதிர்காலம்" என்று கென் ராய்சனை பெருமையார பேசியுள்ளார்.
கென் ராய்சன் ஆல்பம் பாடல்களை இயக்குவதில் திறமை வாய்ந்தவர். அது மட்டுமல்லாது பாடலாசிரியர் மற்றும் பாடகருமாவார். தற்போது சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார் கென் ராய்சன். "நாய் சேகர் ரிட்டன்ஸ், டிடி ரிட்டன்ஸ், மகான்" ஆகிய படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார்.
கென் ராய்சன் குமுதம் யூட்யூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார். இந்த வீடியோவில் ஆல்பம் பாடல்களின் வளர்ச்சியை குறித்தும், தன்னுடை இசை பயணத்தை குறித்தும் பகிர்ந்துள்ளார்.
முழு வீடியோவையும் பார்க்க: Click Here