அஜய் பூபதி இயக்கும் ‘செவ்வாய்கிழமை’!

அஜய் பூபதி இயக்கும் ‘செவ்வாய்கிழமை’!
அஜய் பூபதி இயக்கும் ‘செவ்வாய்கிழமை’!

இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் பாயல் ராஜ்புத் நடிக்கும் ‘செவ்வாய் கிழமை’ எனும் படம் வெளியாகவுள்ளது.

இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில், நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கும் ‘செவ்வாய்கிழமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. 90களில் நடக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. அதுபடி, மலையாளத்தில் ‘சூவ்வழ்ச்சா’, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ‘மங்களவாரம்’, தமிழில் ‘செவ்வாய்கிழமை’ எனும் பெயர்களில் உருவாகிறது.
இந்தப் படத்தில் மேலும் 30 பேர் நடிக்கவுள்ளதாகவும், அந்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகுமென இயக்குநர் அஜய் பூபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படம் நமது நிலம், கலாசாரம், பண்பாடு, அழகியல்களை இந்தப் படம் பிரதிபலிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு ’காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் அஜய் பூபதி, 2018இல் வெளியான ‘ஆர்.எக்ஸ் 100’ மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com