நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ படக்குழுவுக்கு தங்கக் காசுகள் பரிசளித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் - நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’.
இந்தத் திரைப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் இறுதிப் படப்பிடிப்பு நாளில் அப்படக்குழுவினர் அனைவருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தலா 10 கிராம் தங்கக் காசைப் பரிசளித்துள்ளார். மொத்தமாக சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 130 தங்கக் காசுகளை பரிசளித்துள்ளார்.
படப்பிடிப்பின் இறுதி நாளில் மிகவும் உணர்ச்சிவசமான நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தப் படக்குழுவிற்கு தான் ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக இந்தப் பரிசை அளித்துள்ளார் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் ’வெண்ணிலா’ என்கிற கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.